என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோத்தகிரி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
Byமாலை மலர்22 Nov 2020 6:21 PM GMT (Updated: 22 Nov 2020 6:21 PM GMT)
கோத்தகிரி அருகே டேங்கர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கோத்தகிரி:
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி கட்டபெட்டு அருகே உள்ள இடுஹட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு டீசல் ஏறிக்கொண்டு, டேங்கர் லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராமசெல்வம் (வயது 39) ஓட்டி வந்தார்.
இந்த லாரி கோத்தகிரி கட்டபெட்டு பகுதியை அடுத்த பில்லிக்கம்பை பகுதியில் உள்ள குறுகிய வளைவில் திரும்பும் போது, பிரேக் பிடிக்காததால் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அத்துடன் லாரியில் இருந்து டீசல் கொட்டாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தீயணைப்பு அதிகாரி சந்திரகுமார் தலைமையில் கோத்தகிரி, ஊட்ட தீயணைப்பு நிலைய அதிகாரிகள் பிரேமானந்தன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு படையினர் அங்கு வந்து கிரேன் மூலம் கவிழ்ந்த டேங்கர் லாரியை மீட்டனர்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி கட்டபெட்டு அருகே உள்ள இடுஹட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு டீசல் ஏறிக்கொண்டு, டேங்கர் லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராமசெல்வம் (வயது 39) ஓட்டி வந்தார்.
இந்த லாரி கோத்தகிரி கட்டபெட்டு பகுதியை அடுத்த பில்லிக்கம்பை பகுதியில் உள்ள குறுகிய வளைவில் திரும்பும் போது, பிரேக் பிடிக்காததால் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அத்துடன் லாரியில் இருந்து டீசல் கொட்டாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தீயணைப்பு அதிகாரி சந்திரகுமார் தலைமையில் கோத்தகிரி, ஊட்ட தீயணைப்பு நிலைய அதிகாரிகள் பிரேமானந்தன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு படையினர் அங்கு வந்து கிரேன் மூலம் கவிழ்ந்த டேங்கர் லாரியை மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X