என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணியில் நண்பராக பழகி ரூ.15 லட்சம் பட்டுநூல் திருட்டு
Byமாலை மலர்21 Nov 2020 9:40 AM GMT (Updated: 21 Nov 2020 9:40 AM GMT)
ஆரணியில் நண்பராக பழகி ரூ.15 லட்சம் பட்டுநூல் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 60). முன்னாள் ராணுவவீரர். இவர் சுந்தரம் தெருவில் பட்டு நூல் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் எனது கடைக்கு அடிக்கடி வருவார். இதனால் பழக்கம் ஏற்பட்டது. எனவே நான் அவ்வப்போது வெளியே செல்லும் போதெல்லாம் நண்பர் கந்தசாமியை கடையை பார்க்கச் சொல்லி விட்டு செல்வேன்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடையில் வைக்கப்பட்டுள்ள பட்டுநூல் குறைந்து கொண்டே வந்தது. இதனை கண்காணிக்க கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினேன். அதில் கடையில் யாரும் இல்லாத நேரத்தில் கந்தசாமி பட்டு நூலினை திருடும் காட்சிகள் பதிவாகி உள்ளது. அவரிடம் விசாரித்ததில் திருடப்பட்ட பட்டு நூலை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள பாபு என்பவரிடத்தில் கொடுத்து பணம் பெற்றது தெரியவந்தது. இவ்வாறு ரூ.15 லட்சம் வரை நூல்கள் திருடப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் திருட்டு சம்பந்தமாக கந்தசாமி, பாபு மற்றும் புகார் அளித்த மதியழகன் ஆகிய 3 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 60). முன்னாள் ராணுவவீரர். இவர் சுந்தரம் தெருவில் பட்டு நூல் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் எனது கடைக்கு அடிக்கடி வருவார். இதனால் பழக்கம் ஏற்பட்டது. எனவே நான் அவ்வப்போது வெளியே செல்லும் போதெல்லாம் நண்பர் கந்தசாமியை கடையை பார்க்கச் சொல்லி விட்டு செல்வேன்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடையில் வைக்கப்பட்டுள்ள பட்டுநூல் குறைந்து கொண்டே வந்தது. இதனை கண்காணிக்க கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினேன். அதில் கடையில் யாரும் இல்லாத நேரத்தில் கந்தசாமி பட்டு நூலினை திருடும் காட்சிகள் பதிவாகி உள்ளது. அவரிடம் விசாரித்ததில் திருடப்பட்ட பட்டு நூலை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள பாபு என்பவரிடத்தில் கொடுத்து பணம் பெற்றது தெரியவந்தது. இவ்வாறு ரூ.15 லட்சம் வரை நூல்கள் திருடப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் திருட்டு சம்பந்தமாக கந்தசாமி, பாபு மற்றும் புகார் அளித்த மதியழகன் ஆகிய 3 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X