search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவன் மாயம்
    X
    மாணவன் மாயம்

    பெற்றோர் கண்டிப்பு: 10-ம் வகுப்பு மாணவன் மாயம்

    பெற்றோர் கண்டித்ததால் மாயமான 10-ம் வகுப்பு மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவில் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார். இவர், புதுச்சேரி கூட்டுறவு கட்டிட மையத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் நரேஷ் (வயது15) இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலமாக பாடங்களை படித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சரிவர படிக்காமல் நண்பர்களுடன் வெளியில் சென்று விளையாடி வந்ததை, அவரது தந்தை குமார், கண்டித்தார். இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த நரேஷ் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து குமார் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸ் ஏட்டு ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×