என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
தேன்கனிக்கோட்டை அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
தேன்கனிக்கோட்டை அருகே வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா. இவருடைய மகன் சேகர்(வயது 26), கொரட்டகிரி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத்(25). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சின்னபெண்ணங்கூர் பஸ் நிறுத்தம் அருகில் காய்கறி ஏற்றி வந்த சரக்குவேன் பஞ்சராகி சாலையோரத்தில் நின்று இருந்தது. இந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மஞ்சுநாத் படுகாயமடைந்தார். மேலும் வேன் டிரைவர் சங்கர், கிளீனர் சையத்மொயின் ஆகியோரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






