என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
Byமாலை மலர்18 Nov 2020 11:12 AM GMT (Updated: 18 Nov 2020 11:12 AM GMT)
ஈரோட்டில் மின்சாரம் தாக்கி வடமாநில சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
பீகார் மாநிலம் முஜாபூர் மாவட்டம் ஸ்ரீகாந்சிம்ரா பர்காயூன் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரசைனி. இவருடைய மகன் அஜய்குமார் (வயது 15). இவன் ஈரோடு கிருஷ்ணா டாக்சிரோடு பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் வேலை செய்து வந்தான். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பிறகு கடையை அடைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எடை போடும் கருவியின் சுவிட்ச் தொகுப்பை சிறுவன் அஜய்குமார் எதிர்பாராமல் தொட்டான். இதில் அவனது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அங்கேயே அஜய்குமார் மயங்கி விழுந்தான்.
இதைத்தொடர்ந்து சக ஊழியர்கள் அவனை மீட்டு ஆட்டோ மூலமாக சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அஜய்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X