search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மைசூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு- 52 பயணிகள் உயிர் தப்பினர்

    மோசமான வானிலை காரணமாக மைசூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆலந்தூர்:

    கர்நாடக மாநிலம் பெல்காமில் இருந்து மைசூருக்கு நேற்று இரவு தனியார் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் மைசூரில் இறங்க முடியவில்லை. எனவே, சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.

    அதைதொடர்ந்து, அந்த விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதிகாரிகள் தரை இறங்க அனுமதி அளித்தனர்.

    இந்தநிலையில், விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. எனவே, அவசரமாக தரை இறங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.

    உடனே தரை இறங்கி ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த அந்த விமானம் திடீர் என்று பாதி வழியில் நின்றது. இதனால் முதலாவது ஓடு தளத்தில் தரை இறங்க வேண்டிய சென்னை விமானங்கள் 2-வது ஓடு தளத்தில் தரை இறக்கப்பட்டன.

    இந்த விமானத்தில், 47 பயணிகள், 5 ஊழியர்கள் உள்பட 52 பேர் இருந்தனர். சரியான நேரத்தில் விமானி கோளாறை கண்டு பிடித்து அவசரமாக விமானத்தை தரை இறக்கியதால் 52 பேரும் உயிர் தப்பினார்கள்.

    ‘ஓடு தளத்தில் நின்ற விமானத்தில், சற்று நேரத்துக்கு முன்பு இது நிகழ்ந்திருந்தால், பெரிய விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. விமானியின் சாமார்த்தியத்தால் 52 பேர் உயிர் பாதுகாக்கப்பட்டு உள்ளது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஓடுதளத்தில் நின்ற விமானம் இழுவை வாகனம் மூலம் அங்கிருந்து கொண்டு போகப்பட்டு எந்திரம் சரி செய்யப்பட்டது. பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு பயணிகள் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    Next Story
    ×