என் மலர்
செய்திகள்

செல்போன் கோபுரம்
300 அடிஉயர செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
சத்தியமங்கலத்தில் 300 அடிஉயர செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சதுமுகை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (45). தச்சு தொழிலாளி. இவரது மனைவி திலகா. இவர்களுக்கு காயத்ரி என்ற மகளும், அரவிந்த் என்ற மகனும் உள்ளனர்.
சரவணனுக்கும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட சரவணன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அப்போது அவரது தலையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் எக்ஸ்ரேவில் ஒரு இடத்தில் கருப்பாக இருந்தது. இதைப்பார்த்த சரவணன் அது கேமரா என்றும், அதை பக்கத்து வீட்டுகாரர் தான் வைத்து விட்டார் என்றும் கூறி வந்தார். இது தொடர்பாகவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
சரவணன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள 300 அடி உயரம் உள்ள ஒரு தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுபற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் டி.எஸ்.பி., சுப்பையா, தாசில்தார் ரவிசங்கர் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்தனர். மேலும் 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது.
செல்போன் டவரில் இருந்த சரவணனை போலீசார் கீழே இறங்கி வர மைக்கில் பேசினார்கள். ஆனால் அவர் பக்கத்து வீட்டுக்காரர் என் மண்டையில் கேமரா வைத்து விட்டார். எனவே அவரை கைது செய்யுங்கள். இல்லாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.
அவரது மனைவி மற்றும் மகள், மகனும் அழைத்தனர். ஆனால் அவர் வரமறுத்துவிட்டார். இதையடுத்து போலீசார் பக்கத்து வீட்டுக்காரர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஒரு கட்டத்தில் சரவணன் அதிர்ச்சி அடைந்து செல்போன் கோபுரத்தில் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டார்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பெல்ட் அணிந்து கொண்டு செல்போன் கோபுரத்தில் ஏறினர். பின்னர் அவரிடம் நைசாக பேசி காலை 9.30 மணியளவில் அவரை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். பின்னர் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தொழிலாளி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சதுமுகை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (45). தச்சு தொழிலாளி. இவரது மனைவி திலகா. இவர்களுக்கு காயத்ரி என்ற மகளும், அரவிந்த் என்ற மகனும் உள்ளனர்.
சரவணனுக்கும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட சரவணன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அப்போது அவரது தலையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் எக்ஸ்ரேவில் ஒரு இடத்தில் கருப்பாக இருந்தது. இதைப்பார்த்த சரவணன் அது கேமரா என்றும், அதை பக்கத்து வீட்டுகாரர் தான் வைத்து விட்டார் என்றும் கூறி வந்தார். இது தொடர்பாகவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
சரவணன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள 300 அடி உயரம் உள்ள ஒரு தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுபற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் டி.எஸ்.பி., சுப்பையா, தாசில்தார் ரவிசங்கர் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்தனர். மேலும் 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது.
செல்போன் டவரில் இருந்த சரவணனை போலீசார் கீழே இறங்கி வர மைக்கில் பேசினார்கள். ஆனால் அவர் பக்கத்து வீட்டுக்காரர் என் மண்டையில் கேமரா வைத்து விட்டார். எனவே அவரை கைது செய்யுங்கள். இல்லாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.
அவரது மனைவி மற்றும் மகள், மகனும் அழைத்தனர். ஆனால் அவர் வரமறுத்துவிட்டார். இதையடுத்து போலீசார் பக்கத்து வீட்டுக்காரர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஒரு கட்டத்தில் சரவணன் அதிர்ச்சி அடைந்து செல்போன் கோபுரத்தில் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டார்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பெல்ட் அணிந்து கொண்டு செல்போன் கோபுரத்தில் ஏறினர். பின்னர் அவரிடம் நைசாக பேசி காலை 9.30 மணியளவில் அவரை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். பின்னர் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தொழிலாளி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
Next Story






