search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    பள்ளிகொண்டாப்பட்டு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    பள்ளிகொண்டாப்பட்டு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 46), தொழிலாளி. இவர், அந்த பகுதியில் உள்ள நிலத்தின் வழியாக நடந்து சென்றார். அப்போது நிலத்தின் மேலே சென்ற மின்கம்பி அறுந்து சரவணன் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×