search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாகை அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது

    நாகை அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் போலீசாருக்கு பாப்பான் சுடுகாடு அருகே கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த பப்ளிக் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்த கொடிவீரன் என்ற நாகேந்திரனை(வயது 39) பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் அவர் விற்பனை செய்ய வைத்திருந்த 400 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×