search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிணமாக கிடக்கும் கூலித்தொழிலாளி.
    X
    பிணமாக கிடக்கும் கூலித்தொழிலாளி.

    புதுக்கோட்டை அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை

    புதுக்கோட்டை அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் ஆனைவாரி கிராமத்தை சேர்ந்தவர் வீரய்யா (வயது 45). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் இரவு நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். 

    இந்த நிலையில் ஆணைவாரி அருகே உள்ள பாம்பாறு பகுதியில் வீரையா பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் வீரய்யா அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட வீரய்யாவுக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். 

    வீரய்யாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீரய்யாவுடன் சென்ற அவருடைய நண்பர் தலைமறைவாகி விட்டார், அவரை பிடித்தால் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×