என் மலர்
செய்திகள்

கார்த்திக்
தூசி அருகே லாரி மோதி தொழிலாளி பலி
தூசி அருகே லாரி மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
தூசி:
காஞ்சீபுரம் தாலுகா தாயார்குள தெருவை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் கார்த்திக் (வயது 19), கட்டிட தொழிலாளி. திருவண்ணாமலை மாவட்டம் மன்சூராபாத் துருவம்பேட்டை கிராமத்தில் உள்ள உறவினர் அண்ணாமலை என்பவரின் வீட்டை கார்த்தி கட்டிக் கொண்டு வந்தார்.
இந்த நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்காக கார்த்திக் மற்றும் அவரது நண்பர் செல்வம் (18) ஆகிய இருவரும் மோட்டார்சைக்களில் சொந்த ஊருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். தூசி அருகே ஆக்கூர் கூட்டு சாலை கடக்கும்போது காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசியை நோக்கி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். செல்வம் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காஞ்சீபுரம் தாலுகா தாயார்குள தெருவை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் கார்த்திக் (வயது 19), கட்டிட தொழிலாளி. திருவண்ணாமலை மாவட்டம் மன்சூராபாத் துருவம்பேட்டை கிராமத்தில் உள்ள உறவினர் அண்ணாமலை என்பவரின் வீட்டை கார்த்தி கட்டிக் கொண்டு வந்தார்.
இந்த நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்காக கார்த்திக் மற்றும் அவரது நண்பர் செல்வம் (18) ஆகிய இருவரும் மோட்டார்சைக்களில் சொந்த ஊருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். தூசி அருகே ஆக்கூர் கூட்டு சாலை கடக்கும்போது காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசியை நோக்கி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். செல்வம் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






