search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    பருவ மழையை எதிர்கொள்ள தயார்- 5 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கி வைப்பு

    பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் கொள்ளிடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் 5 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இதில் இருந்து 2 ஆயிரம் மணல் மூட்டைகள் எடுத்து செல்லப்பட்டு கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே ஆற்றின் சேதமடைந்த கரை பகுதியில் போடப்பட்டுள்ளது.

    மேலும் போதிய அளவு மண் குவியல்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதையடுத்து மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோரின் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் போதிய அளவுக்கு தயார் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    அதிக மழை பெய்து வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால் கரையில் ஏற்படும் உடைப்பை தவிர்ப்பதற்கு மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்கூட்டியே அடைக்கும் வகையில் மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

    பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
    Next Story
    ×