என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பருவ மழையை எதிர்கொள்ள தயார்- 5 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கி வைப்பு
Byமாலை மலர்15 Nov 2020 11:04 AM GMT (Updated: 15 Nov 2020 11:04 AM GMT)
பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் கொள்ளிடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் 5 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம்:
நாகை மாவட்டம் கொள்ளிடம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இதில் இருந்து 2 ஆயிரம் மணல் மூட்டைகள் எடுத்து செல்லப்பட்டு கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே ஆற்றின் சேதமடைந்த கரை பகுதியில் போடப்பட்டுள்ளது.
மேலும் போதிய அளவு மண் குவியல்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதையடுத்து மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோரின் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் போதிய அளவுக்கு தயார் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதிக மழை பெய்து வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால் கரையில் ஏற்படும் உடைப்பை தவிர்ப்பதற்கு மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்கூட்டியே அடைக்கும் வகையில் மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது.
பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X