என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழையூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த டிரைவர் உயிரிழப்பு
Byமாலை மலர்15 Nov 2020 10:32 AM GMT (Updated: 15 Nov 2020 10:32 AM GMT)
நாகை மாவட்டம் கீழையூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் காரப்பிடாகை தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவருடைய மகன் நடராஜன் (வயது 40). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 11-ந் தேதி தனது வீட்டிலிருந்து வயலுக்கு மோட்டார் சைக்கிளில் கீழையூர் செல்லும் குறுக்கு சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X