என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனியார் தேயிலை தோட்ட அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
Byமாலை மலர்10 Nov 2020 1:59 PM GMT (Updated: 10 Nov 2020 1:59 PM GMT)
சம்பளம் வழங்கக்கோரி தனியார் தேயிலை தோட்ட அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
கூடலூர்:
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தை நிர்வகிக்க முடியாமல் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாளர்கள் ஆளாகி உள்ளனர்.
எனவே சம்பளத்தை வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை சம்பளம் வழங்கவில்லை. இதை கண்டித்தும், 5 மாத சம்பளத்தை வழங்கக்கோரியும் தொழிலாளர்கள் நேற்று நியூஹோப்பில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் தேயிலை தோட்ட நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடந்த வாரத்திலேயே சம்பளம் வழங்கப்படும் என்று தனியார் தேயிலை தோட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள 5 மாத சம்பளத்தில் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு 2 மாத சம்பளம் மற்றும் பயணப்படியை மட்டுமாவது வழங்க முன்வர வேண்டும். மேலும் பல ஆண்டுகளாக போனஸ் வழங்குவதில்லை.
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தை நிர்வகிக்க முடியாமல் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாளர்கள் ஆளாகி உள்ளனர்.
எனவே சம்பளத்தை வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை சம்பளம் வழங்கவில்லை. இதை கண்டித்தும், 5 மாத சம்பளத்தை வழங்கக்கோரியும் தொழிலாளர்கள் நேற்று நியூஹோப்பில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் தேயிலை தோட்ட நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடந்த வாரத்திலேயே சம்பளம் வழங்கப்படும் என்று தனியார் தேயிலை தோட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள 5 மாத சம்பளத்தில் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு 2 மாத சம்பளம் மற்றும் பயணப்படியை மட்டுமாவது வழங்க முன்வர வேண்டும். மேலும் பல ஆண்டுகளாக போனஸ் வழங்குவதில்லை.
எனவே தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு நிலுவை சம்பள தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X