என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை

    தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தின்னூரை சேர்ந்தவர் ருத்ரேஷ் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்தது. இதையொட்டி அவருடைய மனைவி தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ருத்தேஷ் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×