என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    முககவசம் அணியாத 13 பேருக்கு அபராதம்

    போளூர் பகுதியில் முககவசம் அணியாத 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    போளூர்:

    போளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த் துறை, காவல் துறைகளை சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் முதல் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என 13 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் அவர்களுக்கு கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்கள்.
    Next Story
    ×