என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்வமுருகன் மரணம்- உயர்நீதிமன்றத்தில் மனைவி வழக்கு
Byமாலை மலர்9 Nov 2020 9:42 AM GMT (Updated: 9 Nov 2020 9:42 AM GMT)
விருத்தாசலம் கிளைச்சிறையில் செல்வமுருகன் உயிரிழந்தது தொடர்பாக அவரது மனைவி பிரேமா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அருகே காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). முந்திரி வியாபாரி. இவர் நெய்வேலி வடக்குத்து கிராமத்தில் உள்ள வாடகை வீட்டில் மனைவி பிரேமா (34) மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
கடந்த 30-ந் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக செல்வமுருகனை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்.கடந்த 4-ந் தேதி செல்வமுருகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செல்வமுருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நெய்வேலி போலீசார் அடித்து துன்புறுத்தியதால்தான் செல்வமுருகன் இறந்ததாக அவரது மனைவி பிரேமா புகார் கூறினார். அவரது சாவுக்கு காரணமான போலீசாரை கைது செய்யும்வரை இறந்த செல்வமுருகனின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது மனைவி பிரேமா மற்றும் உறவினர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக விருத்தாசலம் கிளை சிறையில் செல்வமுருகனின் இறப்பு குறித்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஆனந்த் விசாரணை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து செல்வமுருகனின் இறப்பு குறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார். அதன்பேரில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.
கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ்நிலையத்துக்கு சென்று சம்பவத்தன்று பணியில் இருந்த போலீசாரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதன்பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நெய்வேலியில் இருந்து புறப்பட்டு விருத்தாசலம் கிளை சிறைக்கு சென்று சிறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அங்கிருந்த கைதிகளிடம் செல்வமுருகனின் இறப்பு குறித்து 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் விருத்தாச்சலம் கிளைச் சிறையில் முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணமடைந்த விவகாரத்தில், போலீசார் மீது கொலை வழக்கு பதியக் கோரி செல்வமுருகனின் மனைவி பிரேமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் உடந்தையாக இருந்த காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யவும், செல்வமுருகன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X