என் மலர்

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஓசூரில் நட்சத்திர ஓட்டலில் ஊழியர்களை மிரட்டிய 3 போலி நிருபர்கள் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஓசூரில் நட்சத்திர ஓட்டலில் ஊழியர்களை மிரட்டிய 3 போலி நிருபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலம், பங்காருபேட்டை மாவட்டம், நீலகிரிபில்லி பகுதியை சேர்ந்தவர் பவானி (வயது 29). இவர் ஓசூர் அருகே உள்ள பத்தலப்பள்ளி சாரல் நகர் பகுதியில் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று முன்தினம் காலை ஓட்டலுக்கு வந்த 3 வாலிபர்கள், ஊழியர்கள் மற்றும் மேலாளர் பவானி ஆகியோரிடம் நிருபர்கள் என கூறி தகராறு செய்து மிரட்டினார்கள். இது தொடர்பாக, அட்கோ போலீசில் பவானி புகார் செய்தார். 

    விசாரணையில், ஓசூர் தர்கா கோபி கார்டன் பகுதியை சேர்ந்த முகமது அலி (வயது 33), கிருஷ்ணா நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்த சானு (29), ஓசூர் தர்கா மாருதி நகரை சேர்ந்த தயானந்தன் (22) என தெரிய வந்தது. அத்துடன், முகமது அலி மற்றும் சானு ஆகியோர் போலி நிருபர்கள் மற்றும் தயானந்தன் போலி போட்டோகிராபர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×