என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொண்டலாம்பட்டி அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி
Byமாலை மலர்8 Nov 2020 9:25 AM GMT (Updated: 8 Nov 2020 9:25 AM GMT)
கொண்டலாம்பட்டி அருகே ஏ.டி.எம். மையத்தில் திருட முயன்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள காக்காபாளையம் பிரிவு வேம்படிதாளம் ரோட்டில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் ஒன்று இயங்கி வருகிறது. சம்பவத்தன்று அந்த ஏ.டி.எம். மையத்தில் முகமூடி அணிந்திருந்த 2 மர்ம நபர்கள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த 2 கேமராக்களில் ஒன்றை பேப்பர் போட்டு ஒட்டியும், மற்றொன்றை பபுள் கம் கொண்டு ஒட்டியும் மறைத்தனர். அதன்பிறகு ஏ.டி.எம்.மில் பணத்தை திருட இரும்பு கம்பியால் எந்திரத்தை உடைத்து பார்த்துள்ளனர். இதற்கிடையே அதனை முழுமையாக உடைக்க முடியாமல் மர்ம நபர்கள் திணறினர். அப்போது அந்த மையத்துக்கு பணம் எடுப்பதற்காக சிலர் வந்தனர். இதை பார்த்து அங்கு திருட முயன்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கேமராவை ஆய்வு செய்து விசாரித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X