என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் ரூ.4½ லட்சம் நகைகள் திருட்டு- வேலைக்கார பெண் மீது புகார்
Byமாலை மலர்8 Nov 2020 8:43 AM GMT (Updated: 8 Nov 2020 8:43 AM GMT)
புதுக்கோட்டை அருகே ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் ரூ.4½ லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு போனது தொடர்பாக வேலைக்கார பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே அடப்பன்வயல் 3-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன்(வயது 61). இவர் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருச்சி, விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்த வைரம் மற்றும் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மொத்தம் ரூ.4½ லட்சம் மதிப்பில் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
நகைகளை வீட்டில் வேலை செய்து வந்த திருவப்பூரை சேர்ந்த ராஜலட்சுமி கொஞ்சம், கொஞ்சமாக திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்து திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கோவிந்தராஜன் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவிந்தராஜன் வீட்டில் வேலைசெய்து வந்த ராஜலட்சுமியை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே அடப்பன்வயல் 3-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன்(வயது 61). இவர் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருச்சி, விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்த வைரம் மற்றும் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மொத்தம் ரூ.4½ லட்சம் மதிப்பில் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
நகைகளை வீட்டில் வேலை செய்து வந்த திருவப்பூரை சேர்ந்த ராஜலட்சுமி கொஞ்சம், கொஞ்சமாக திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்து திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கோவிந்தராஜன் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவிந்தராஜன் வீட்டில் வேலைசெய்து வந்த ராஜலட்சுமியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X