search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செ.கு.தமிழரசன்
    X
    செ.கு.தமிழரசன்

    அரசியல் வருகைக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைக்கவில்லை- செ.கு.தமிழரசன் பேட்டி

    அரசியல் வருகை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்று செ.கு.தமிழரசன் கூறியுள்ளார்.
    வேலூர்:

    வேலூரில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது-

    உள்ளாட்சி பதவிக்கான பாதி தேர்தலை நடத்திவிட்டு மீதி தேர்தலை நடத்தாமல் இருப்பது மிகப்பெரிய ஜனநாயக சிதைவு. மீதமுள்ள உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும். ஒரு வேளை தேர்தல் நடத்தினால் அதில் தேர்வு செய்பவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என்பதையும் மத்திய அரசு விளக்க வேண்டும்.

    எனது நண்பரான ரஜினிக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அவரது உடல் நிலை குறித்து அறிக்கையில் சொல்லி இருக்கிறார்.
    இந்த நேரத்தில் அவரது உடல் நலன் முக்கியம். ஆனாலும் அவர் அரசியலுக்கு வந்து களம் காண ஜனவரி, பிப்ரவரியில் கூட வாய்ப்பு இருக்கிறது.
    கட்சி தொடங்கி விரைவில் ஆட்சி அமைத்த சம்பவங்கள் தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஆந்திராவில் என்.டி.ஆர்.க்கும் நடந்துள்ளது. அரசியல் வருகை குறித்து ரஜினி தனது அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. தொடரும் என்று தான் போட்டுள்ளார்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். 7 பேர் விடுதலையில் தி.மு.க கூட்டணியில் ஒத்த கருத்து இல்லை. பா.ஜ.கவுக்கும் தெளிவான கருத்து இல்லை. 7 பேர் விடுதலையில் முடிவெடுப்பவர்கள் மத்திய அரசுதான். இனியும் அவர்களை ஜெயிலில் வைத்திருப்பது சரியல்ல என்றார்.
    Next Story
    ×