என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடும்ப தகராறில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்7 Nov 2020 8:11 AM GMT (Updated: 7 Nov 2020 8:11 AM GMT)
ஊரப்பாக்கம் அருகே குடும்ப தகராறில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை அடுத்த காரணைப்புதுச்சேரி கிராமத்திலுள்ள கோகுலம் காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் தேவன் (வயது 45). இவர் அதே பகுதியில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம், இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இதனால் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் மனமுடைந்த தேவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை அடுத்த காரணைப்புதுச்சேரி கிராமத்திலுள்ள கோகுலம் காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் தேவன் (வயது 45). இவர் அதே பகுதியில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம், இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இதனால் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் மனமுடைந்த தேவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X