search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கீரனூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    கீரனூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    கீரனூர் அடுத்த கலைக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி (வயது 46). விவசாயி. இவர் சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைகளில் காண்பித்து மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். இதனால் மனமுடைந்த சக்தி வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×