என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கே.வி.குப்பம் அருகே தொழிலாளி தற்கொலை

    கே.வி.குப்பம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் அருகே பசுமாத்தூர் துலுக்காத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜன்பாபு (வயது 38), தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி ஜீவமணி கொடுத்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×