என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழாய் உடைந்து காவிரி ஆற்று குடிநீர் வீணாக செல்வதை காணலாம்
    X
    குழாய் உடைந்து காவிரி ஆற்று குடிநீர் வீணாக செல்வதை காணலாம்

    சென்னிமலையில் 2 மாதங்களாக குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

    சென்னிமலையில் கடந்த 2 மாதங்களாக குழாய் உடைந்து காவிரி குடிநீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆங்காங்கே மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் சென்னிமலையில் தினசரி மார்க்கெட் அருகே காமாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் காவிரி ஆற்று குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாக்கடைக்கு செல்கிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘குடிநீர் குழாய் உடைந்து கடந்த 2 மாதங்களாக இரவு, பகலாக தண்ணீர் வீணாக வெளியேறி சாக்கடை கால்வாயில் கலக்கிறது. இந்த தண்ணீர் செல்லும் பாதையில் புற்கள் கூட முளைத்து வளர்ந்து விட்டது.

    குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுவது குறித்து நாங்கள் பலமுறை சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரி களிடம் புகார் தெரிவித்து விட்டோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் வீட்டு குடிநீர் இணைப்புக்காக ரூ.150 வரியாக பேரூராட்சிக்கு செலுத்துகிறோம். ஆனால் போதுமான குடிநீர் எங்களுக்கு கிடைக்காத பட்சத்தில் குழாய் உடைந்து இப்படி தண்ணீர் வீணாக செல்வது வேதனையாக உள்ளது,’ என்றனர்.
    Next Story
    ×