என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயங்கொண்டத்தில் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
Byமாலை மலர்4 Nov 2020 7:04 AM GMT (Updated: 4 Nov 2020 7:04 AM GMT)
ஜெயங்கொண்டத்தில், விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால், கோர்ட்டு உத்தரவின்பேரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவரது மகன் பாரதிராஜா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு மீன்சுருட்டி அருகே சொக்கலிங்கபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அரசு பஸ் மோதி படுகாயமடைந்தார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். இதையடுத்து தனது மகன் இறந்ததால், அரசு போக்குவரத்து கழகம் ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க கோரி கடந்த 2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் இறந்த பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக ரூ.14 லட்சத்து 72 ஆயிரத்து 722 தொகையை சென்னை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வழங்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவினை நிறைவேற்றக்கோரி, மீண்டும் கோர்ட்டில் ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்து, விபத்தில் இறந்த பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு தொகையை சென்னை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என்றும், கடந்த மாதம் 16-ந் தேதி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அதன்பின்னரும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை.
இதையடுத்து ஜெயங்கொண்டம் சிறப்பு நீதிமன்ற அமீனா மகாராஜன், ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில், கும்பகோணத்தில் இருந்து சென்னையை நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை நிறுத்தி ஜப்தி செய்து, அரியலூர் நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றார். இதற்கிடையே அந்த பஸ்சில் பயணம் செய்த 15 பயணிகளும் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X