search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தலை தீபாவளிக்கு வர கணவருக்கு விடுமுறை கிடைக்காததால் பெண் தற்கொலை

    வெளிநாட்டில் இருக்கும் கணவருக்கு தலை தீபாவளிக்கு ஊருக்கு வர விடுமுறை கிடைக்காததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பொறையாறு:

    செம்பனார்கோவில் அருகே வடகரை புலிகண்ட புத்தூரை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி சங்கீதா (வயது 25). இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து பாபு வேலைக்காக மலேசியா சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    சில தினங்களுக்கு முன்பு சங்கீதா, பாபுவிடம் செல்போன் மூலம் தலை தீபாவளிக்கு ஊருக்கு வருமாறு கூறியுள்ளார். பாபு பணி செய்யும் நிறுவனத்தில் விடுமுறை கிடைக்காததால் தலை தீபாவளி கொண்டாட வர இயலாது என கூறியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்தசங்கீதா நேற்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சங்கீதாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆவதால் உதவி கலெக்டர் மகாராணி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
    Next Story
    ×