search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி பெயிண்டர் பலி

    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 55). பெயிண்டர். இவர் சம்பவத்தன்று வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி கிராமத்தில் உள்ள குளுந்தாளம்மன் மற்றும் முனீஸ்வரர் கோவிலுக்கு தனது மோட்டார்சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் அங்கு நடந்த பூஜையில் கலந்து கொண்டு, ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது வேதாரண்யம் நாகை மெயின்ரோட்டில் வெள்ளபள்ளம் கிராமம் அருகே சென்ற போது, எதிரே நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த முருகானந்தத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×