என் மலர்
செய்திகள்

கைது
பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
பர்கூர் போலீசார் கோதிஅழகனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பர்கூரை சேர்ந்த ரவி (வயது 65), செட்டி (61), சீனிவாசன் (47) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தளி போலீசார் சூளகுண்டா வனப்பகுதியையொட்டி ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சூளகுண்டா சோமசேகர் (25), மாருப்பள்ளி சிவண்ணா (75), ராஜசேகர் (35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மத்தூர் போலீசார் சின்ன அல்ரஅள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பாதுஷா (50), முருகன் (40) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story






