search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    கிருஷ்ணகிரியில் மருத்துவ கல்வியில் ஓ.பி.சி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்த ஆண்டே மருத்துவ கல்வியில் ஓ.பி.சி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முனிராவ், செய்தி தொடர்பாளர் ஜிம் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், செம்பட்டி சிவா, ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், அருண், தியாகு, பாக்கியராஜ், முத்துக்குமார், சிறுத்தை ராஜா, பவுன்ராஜ், மாவட்ட பொறுப்பாளர்கள் திராவிடராஜா, அசோகன், குபேந்திரன், வேங்கைவளவன், கிருஷ்ணமூர்த்தி, முரளி, சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×