search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேர் கைது

    ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார். பொருளாளர் விஜயபாலன், மாநகர செயலாளர் அம்ஜித்கான், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாபர் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சித்திக், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

    ஓ.பி.சி. மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பகுதி செயலாளர் பொன்.தம்பிராஜன், மேற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் சண்முகம், செய்தி தொடர்பாளர் துரை, வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் ரேவந்த், ஒன்றிய செயலாளர்கள் துரை ஆறுமுகம், சரண், தங்கராசு, முரளி, பெரியகாளையன், வெற்றிச்செல்வன் உள்பட பலர் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்து ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    Next Story
    ×