என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் கடைகளை நாளை திறக்கக்கூடாது - கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவு
Byமாலை மலர்29 Oct 2020 7:04 AM GMT (Updated: 29 Oct 2020 7:04 AM GMT)
மிலாது நபியையொட்டி கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மிலாது நபி பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை டாஸ்மாக் கடைகளையும், மதுபானம் அருந்தும் கூடங்களையும் நாளை திறக்கக்கூடாது. எனவே மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், மிலாது நபி அன்று எல்லா டாஸ்மாக் கடைகளும், மது அருந்தும் கூடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.3 ஓட்டல் பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். இதனை மீறி யாரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ, கடைகளை திறந்து வைத்திருந்தாலோ, கடை மேற்பார்வையாளர் மீதும், எப்.எல்.3 பார் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X