என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பலாத்காரம் செய்து 2 பெண்கள் கொலை - 5 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
Byமாலை மலர்28 Oct 2020 1:16 PM GMT
விழுப்புரத்தில் பலாத்காரம் செய்து 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
விழுப்புரம்:
கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் தெருநாவலூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கொத்தனூர் எனும் கிராமத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்துள்ளனர், ஆனால் கிடைக்கவில்லை.
இது போல 2014 ஆம் ஆண்டில் சொலம்பட்டை எனும் கிராமத்தில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கிலும் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் களியமூர்த்தி என்பவர் இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இவர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணையில் 5 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்தை சேர்ந்த வடிவேல், மதியழகன், இளையராஜா, பாலமுருகன் மற்றும் குருபாலன் ஆகிய 5 பேர் விழுப்புரம் மகளீர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு நடைபெற்றுள்ளது. இவர்கள் 5 பேருக்கும் மகளீர் நீதிமன்றத்தில் வைத்து சாகும் வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X