என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    பந்தலூர் அருகே காணாமல் போன வாலிபர் மரத்தில் பிணமாக தொங்கினார்

    பந்தலூர் அருகே காணாமல் போன வாலிபர் மரத்தில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பந்தலூர்:

    பந்தலூர் அருகே காணாமல் போன வாலிபர் மரத்தில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேங்கோரேஞ்சு பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 28). இவர் கடந்த 23-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உடனே உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து தேவாலா போலீசில், ஹரிகிருஷ்ணனின் உறவினர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அத்திமாநகர் வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் தொங்குவதாக தேவாலா போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, பார்வையிட்டனர். அப்போது தூக்கில் பிணமாக தொங்குவது ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

    அதன்பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் என்ன காரணத்துக்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் உடலை யாரேனும் தொங்க விட்டு சென்றனரா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×