என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    செங்கம் அருகே லாரி மோதி முதியவர் பலி

    செங்கம் அருகே லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள கண்ணகுருக்கை கிராமம் செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அண்ணாமலை (வயது 76) என்பவர் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மினி லாரி திடீரென மோதியதில் அண்ணாமலை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் மினி லாரி அருகில் இருந்த கட்டிடத்தின் மீது மோதி நின்றது. அப்போது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென மினி லாரி மீது மோதியது. இதனால் முன்பக்க கண்ணாடி உடைந்தது. லாரி டிரைவர் ஏழுமலை (38) என்பவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாய்ச்சல் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×