என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிரைவர்கள் உள்பட 5 பேர் கைது

    அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 லாரிகள் மற்றும் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
    குத்தாலம்:

    திருவாலங்காடு சோதனை சாவடி அருகே குத்தாலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது மயிலாடுதுறை அருகே திருமங்கலத்தில் இருந்து வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் அனுமதியின்றி அள்ளி வந்த மணல் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 2 லாரிகளை பறிமுதல் செய்து, லாரி டிரைவர்களான புதுக்கோட்டை தேரிப்பட்டியை சேர்ந்த முரளி (வயது 39), அறந்தாங்கியை சேர்ந்த ஜெய்சங்கர் (49) மற்றும் லாரி கிளீனர் வலங்கைமான் கிளக்காடு காளிதாஸ் மகன் பிரபாகரன் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இதேபோல சேத்திராபாலபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சோழம்பேட்டையில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் வழிமறித்து பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சோழம்பேட்டையை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அமிர்தராஜ் (21) மற்றும் உடன் வந்த அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் அருண்குமார் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×