search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரடாச்சேரி:

    கொரடாச்சேரி பெருமாளகரத்தை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 36). விவசாயி. கடந்த 2 ஆண்டுகளாக இவர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் குடும்ப பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சத்தியராஜ் சம்பவத்தன்று பூச்சிமருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்து சத்தியராஜ் மனைவி சுதா கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    Next Story
    ×