search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணியிடமாற்றம்
    X
    பணியிடமாற்றம்

    தஞ்சை மாவட்டத்தில் 14 தாசில்தார்கள் பணியிட மாற்றம்- கலெக்டர் உத்தரவு

    தஞ்சை மாவட்டத்தில் 14 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவு பிறப்பித்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் 14 தாசில்தார் நிலையில் உள்ள அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் பிறப்பித்தார்.

    டாஸ்மாக் உதவி மேலாளராக(சில்லரை வணிகம்) இருந்த புண்ணியமூர்த்தி பூதலூர் வட்டார சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அங்கிருந்த சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராமலிங்கம் டாஸ்மாக் உதவி மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தஞ்சை அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தார் கணேஷ்வரன் ஒரத்தநாடு தாசில்தாராகவும், ஒரத்தநாடு தாசில்தார் அருள்ராஜ் பட்டுக்கோட்டை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், பட்டுக்கோட்டை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் அருள்பிரகாசம் தஞ்சை வரவேற்பு தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தஞ்சை வரவேற்பு தனி தாசில்தார் முருகவேல் பாபநாசம் தாசில்தாராகவும், பாபநாசம் தாசில்தார் கண்ணன் கும்பகோணம் தாசில்தாராகவும், கும்பகோணம் தாசில்தார் பாலசுப்பிரமணியன் திருவிடைமருதூர் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    திருவிடைமருதூர் தாசில்தார் சிவக்குமார் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அலகு தனி தாசில்தாராகவும், அங்கிருந்த தனி தாசில்தார் பிரபாகரன் கும்பகோணம் கலால் மேற்பார்வை அலுவலராகவும், கலால் மேற்பார்வை அலுவலராக இருந்த மாதேஸ்வரி கும்பகோணம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கும்பகோணம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக இருந்த முருககுமார் தஞ்சை அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தாராகவும், தஞ்சை கலால் கோட்ட அலுவலர் அருணகிரி பூதலூர் தாசில்தாராகவும், பூதலூர் தாசில்தார் சிவக்குமார் தஞ்சை கலால் கோட்ட அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×