என் மலர்
செய்திகள்

தற்கொலை
தொட்டியம் அருகே விவசாயி தற்கொலை
தொட்டியம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டியம்:
தொட்டியம் அருகே உள்ள நாகையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 61). விவசாயி, இவர் நேற்று காலை வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story