search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஓசூர் அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

    ஓசூர் அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறையை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 22), வேன் டிரைவர். சம்பவத்தன்று இவர் பெற்றோருடன் சண்டை போட்டுக் கொண்டு ஓசூர் வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பத்தலப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து.
    Next Story
    ×