என் மலர்
செய்திகள்

கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பத்மநாபபுரம்:
தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரதாணு தலைமையிலான போலீசார் தக்கலை பஸ் நிலையம் ராமன்பரம்பு பகுதியில் உள்ள ஒரு கடையில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்த 158 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் ராமன்பரம்பு பகுதியை சேர்ந்த முருகன் (வயது 45) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story