search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

    உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் ஒன்றியம் எடமச்சி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 48). இவரது மனைவி இந்திராணி. இவர்கள் இருவரும் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு காஞ்சீபுரத்தை அடுத்த களக்காட்டூர் கிராமத்திற்கு சென்றனர். திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம், 2 பட்டு சேலைகள் திருடப்பட்டது.

    மேலும் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி அம்மாள் என்பவருடைய வீடு, சுப்பிரமணி என்பவருடைய வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவர்கள் வீட்டில் எந்தவிதமான பொருட்களும் திருட்டு போகவில்லை என தெரியவந்தது.

    இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×