search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    குன்னூரில் இன்று அதிகாலை காட்டெருமை தாக்கி வாலிபர் பலி

    குன்னூரில் இன்று அதிகாலை காட்டெருமை தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது மேல் அட்டடி. அடர்ந்த வனப்பகுதியான இங்கு சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசிக்கின்றன. இதனையொட்டி குடியிருப்புகளும் அதிகம் உள்ளன.

    உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் வனத்தைவிட்டு குடியிருப்புக்குள் அவ்வப்போது நுழைந்து விடுகின்றன. குடியிருப்புக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் கீழ் அட்டடிப்பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 26). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இன்று அதிகாலை மேல் அட்டடி பகுதியில் உள்ள ஒரு ஒற்றையடி பாதையில் நடந்து சென்றார். அப்போது புதர்மறையில் இருந்த காட்டெருமை ஆவேசமாக ஓடிவந்து ரஞ்சித்தின் வயிறு மற்றும் தொடை பகுதியில் தாக்கியது. பின்னர் கொம்பில் ரஞ்சித்தை சூழற்றி 20 அடி பள்ளத்தில் வீசியது. இதில் குடல் சரிந்து ரஞ்சித் படுகாயம் அடைந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டு அருகில் சென்று பார்த்தனர். சம்பவ இடத்திலேயே ரஞ்சித் ரத்தவெள்ளத்தில் உயிர் இழந்து கிடந்தார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடந்து வெகுநேரமாகியும் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ்சோ, வனத்துறையோ சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று அந்த பகுதிமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

    Next Story
    ×