search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்டின் வயிற்றில் இருந்து அகற்றி குப்பைகள்
    X
    மாட்டின் வயிற்றில் இருந்து அகற்றி குப்பைகள்

    மாட்டின் வயிற்றில் 20 கிலோ குப்பைகள்- அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய டாக்டர்கள்

    வேலூர் அருகே மாட்டின் வயிற்றில் 20 கிலோ குப்பைககளை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பென்னாத்தூரை சேர்ந்தவர் பரந்தாமன். இவர் பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாடு உணவு உண்ணாமல் அவதிப்பட்டு வந்தது. மேலும் மூச்சுவிடவும் திணறியது. இதனால் பரந்தாமன், மாட்டை வேலூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். மாட்டை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாட்டின் வயிற்றில் தேவையில்லாத பொருட்கள் இருக்கலாம் அல்லது உணவு குழாயில் ஏதேனும் சிக்கி இருக்கலாம் என கருதினார்.

    பின்னர் மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் மேற்பார்வையில் டாக்டர்கள் ஜோசப், ரவிசங்கர் உள்பட பலர் கொண்ட குழுவினர் மாட்டிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மாட்டின் வயிற்றில் சுமார் 20 கிலோ பிளாஸ்டிக்கால் ஆன பைகள், பாசி மாலை, கல், இரும்பு கம்பி போன்ற குப்பைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை டாக்டர்கள் அப்புறப்படுத்தினர். இதையடுத்து மாட்டின் உடல்நலம் சீரானது.

    இந்த அறுவை சிகிச்சை குறித்து டாக்டர்கள் குழுவினர் கூறுகையில், ‘இந்த அறுவை சிகிச்சையானது மாவட்டத்தில் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாடுகள் வைத்திருப்பவர்கள் சாலைகளில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். அவற்றை மாடுகள் சாப்பிடுகிறது. இதனால் மாட்டின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே மாடுகளை சாலைகளிலும், பிளாஸ்டிக் பைகள் கிடக்கும் பகுதிகளிலும் மேய்ச்சலுக்கு விட வேண்டாம்’ என்றனர்.
    Next Story
    ×