search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    வள்ளிமலை கோவில் அருகே கள்ளக்காதலி கொலை- கட்டிட மேஸ்திரி கைது

    வள்ளிமலை அருகே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
    திருவலம்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கீழ்கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் அன்பு (வயது 42), கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஆற்காடு மாசாபேட்டை பகுதியை சேர்ந்தவர் வத்சலா (55). இவரது கணவர் இறந்துவிட்டார். வத்சலாவுக்கு, ஒரு மகள் உள்ளார். அவருக்கும் திருமணமாகி விட்டது.

    அன்புவுக்கும், அவரிடம் கட்டிட வேலைகளை செய்து வந்த வத்சலாவுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அன்புவும், வத்சலாவும் வள்ளிமலைக்கு வந்துள்ளனர். கோவில் அருகே உள்ள மலைமேல் இருவரும் பேசிக்கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது வத்சலா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அன்புவிடம் கேட்டுள்ளார்.

    தன் பெண்களுக்கு திருமணம் செய்துவைத்து விட்ட நிலையில், உன்னை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று அன்பு மறுத்துள்ளார். வத்சலா இதனை ஏற்று கொள்ளாமல், திருமணம் செய்ய தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அன்பு தான் அணிந்திருந்த மேல் துண்டு மூலம் வத்சலாவை கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது ஊருக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் வத்சலாவின் மகள் தனது தாயை கண்டுபிடித்து தருமாறு, வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கடந்த 8-ந் தேதி புகார் செய்தார். அதன்பேரில் வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வத்சலாவை தேடி வந்தனர்.

    போலீஸ் விசாரணையில், வத்சலாவிற்கும், அன்புவிற்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அன்புவை போலீசார் பிடித்து விசாரணை செய்தபோது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து மேல்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வள்ளிமலை கோவில் அருகே உள்ள மலைமேல் பாறை மறைவில் அழுகிய நிலையில் இருந்த வத்சலாவின் பிணத்தை கண்டுபிடித்தனர். மேலும் அன்புவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×