என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
வேளாங்கண்ணி அருகே சட்டத்திற்கு விரோதமாக குயில்களை பிடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
வேளாங்கண்ணி அருகே சட்டத்திற்கு விரோதமாக குயில்களை பிடித்தவர்களுக்கு வனத்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் கவுண்டர்புரத்தில் உள்ள முந்திரி தோப்பில் குயில்கள் அடைந்து வருகின்றன. இதனை மர்மநபர்கள் பிடித்து செல்வதாக நாகப்பட்டினம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று வனச்சரக அதிகாரி குமரேசன் (பொறுப்பு) தலைமையில் வனசரக அதிகாரிகள் மற்றும் வனவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒருவர் நான்கு குயில்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பிரதாபராமபுரம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்த செல்லையன் மகன் குமணன் (வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த நான்கு குயில்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்து, அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதேபோல் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் உள்ள ஒரு தோப்பில் 10 குயில்களை அந்த பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் ராகவன் (25) என்பவர் பிடித்து வைத்து இருந்தார். பிடித்து வைத்திருந்த 10 குயில்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்து, அவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பின்னர் வனசரக அதிகாரி குமரேசன் கூறுகையில், பறவைகளை தனிநபர்கள் பிடித்து செல்வது சட்டப்படி குற்றமாகும். இதை யாரும் செய்யக்கூடாது என்றார்.
Next Story






