என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்20 Oct 2020 4:51 AM GMT (Updated: 20 Oct 2020 4:51 AM GMT)
திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் சுபம் நகர், சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 23). இவர், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது அதே கல்லூரியில் படித்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லா (23) என்பவரை சுமார் 3 வருடங்களாக காதலித்து வந்தார்.
இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. பின்னர் இரு வீட்டாரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். வெங்கடேசன் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.
ஸ்டெல்லாவுக்கு அடிக்கடி தீராத தலைவலி ஏற்பட்டு வந்ததாகவும், இதற்காக மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சமீப காலமாக அவர் தீராத மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
நேற்று காலையும் அவருக்கு தலைவலி ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த ஸ்டெல்லா, தனது படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்டெல்லாவுக்கு திருமணமாகி 5 மாதமே ஆவதால் இதுபற்றி தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X