என் மலர்

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    கணவருடன் கருத்து வேறுபாடு: 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகூர் அருகே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
    பாகூர்:

    பாகூரை அடுத்த சேலியமேடு வாணிதாசன் வீதியை சேர்ந்தவர் சுசீலா (வயது 50). இவர் தனது மகள் வாசுகி (29) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புபாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (37) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு மூன்று வயதில் தயாநிதி என்ற மகனும், ஒரு வயதில் லோகப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் வாசுகி மற்றும் ராமமூர்த்தி இடையே கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. கடந்த 15-ந் தேதி ராமமூர்த்தியின் தந்தை தனசேகரன், சுசீலாவிடம் வாசுகி மற்றும் குழந்தைகளை காணவில்லை என்று கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுசீலா உறவினர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து பாகூர் போலீஸ் நிலையத்தில் சுசீலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுகி மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×