என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கணவருடன் கருத்து வேறுபாடு: 2 குழந்தைகளுடன் பெண் மாயம்
Byமாலை மலர்19 Oct 2020 10:26 AM GMT (Updated: 19 Oct 2020 10:26 AM GMT)
பாகூர் அருகே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
பாகூர்:
பாகூரை அடுத்த சேலியமேடு வாணிதாசன் வீதியை சேர்ந்தவர் சுசீலா (வயது 50). இவர் தனது மகள் வாசுகி (29) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புபாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (37) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு மூன்று வயதில் தயாநிதி என்ற மகனும், ஒரு வயதில் லோகப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் வாசுகி மற்றும் ராமமூர்த்தி இடையே கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. கடந்த 15-ந் தேதி ராமமூர்த்தியின் தந்தை தனசேகரன், சுசீலாவிடம் வாசுகி மற்றும் குழந்தைகளை காணவில்லை என்று கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுசீலா உறவினர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து பாகூர் போலீஸ் நிலையத்தில் சுசீலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுகி மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X