என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கடைகளில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கடைகளில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    ஓசூர் டவுன் போலீசார், ராயக்கோட்டை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பழனிசாமி (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், ராயக்கோட்டை போலீசார் அண்ணா சிலை அருகே உள்ள மளிகை கடையில் சோதனை செய்தனர். அங்கு புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த கடைக்காரர் சத்யநாராயணன்(60) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கல்லாவி போலீசார் ஓலப்பட்டி கூட்ரோடு அருகே ரோந்து சென்றபோது அங்குள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர் பழனிமணி(53) என்பவரை போலீசார் கைது செய்தனர். 3 கடைகளில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×