என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுக்கடை பாரில் புகுந்து வாலிபரிடம் பணம் பறித்த 4 பேர் கைது
Byமாலை மலர்19 Oct 2020 6:52 AM GMT (Updated: 19 Oct 2020 6:52 AM GMT)
போத்தனூர் அருகே மதுக்கடை பாரில் புகுந்து வாலிபரிடம் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போத்தனூர்:
திருச்சி கருமலையை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 23). இவர் கோவை அருகே ஈச்சனாரி அய்யப்பன்நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக் கடையில் பார் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அந்த மதுக்கடை பாருக்குள் திடீரென்று 4 பேர் புகுந்து தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டு இருந்தனர். இதை பாஸ்கர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 4 பேரும் பாஸ்கரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசியபடி திடீரென்று கத்தியைக் காட்டி மிரட்டி பாஸ்கரிடம் ரூ.500- ஐ பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பாஸ்கரிடம் பணம் பறித்த ரத்தினபுரியை சேர்ந்த ரஞ்சித் (21), பெஞ்சமின் (26), மதுக்கரையை சேர்ந்த பரணிதரன், ஜீவானந்தம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X