search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மதுக்கடை பாரில் புகுந்து வாலிபரிடம் பணம் பறித்த 4 பேர் கைது

    போத்தனூர் அருகே மதுக்கடை பாரில் புகுந்து வாலிபரிடம் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போத்தனூர்:

    திருச்சி கருமலையை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 23). இவர் கோவை அருகே ஈச்சனாரி அய்யப்பன்நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக் கடையில் பார் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அந்த மதுக்கடை பாருக்குள் திடீரென்று 4 பேர் புகுந்து தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டு இருந்தனர். இதை பாஸ்கர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 4 பேரும் பாஸ்கரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    பின்னர் அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசியபடி திடீரென்று கத்தியைக் காட்டி மிரட்டி பாஸ்கரிடம் ரூ.500- ஐ பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பாஸ்கரிடம் பணம் பறித்த ரத்தினபுரியை சேர்ந்த ரஞ்சித் (21), பெஞ்சமின் (26), மதுக்கரையை சேர்ந்த பரணிதரன், ஜீவானந்தம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×